தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - ஒரு கப்
மைதா மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரக பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
சர்க் கரை - ஒரு சிட்டிகை
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
எண் ணெய் - பொரிப்பதற்கு.
வெதுவெதுப்பான நீர் - மாவு பிசைவதற்கு
செய்முறை:
கோதுமை மாவையும்,மைதாவையும் ஒன்றாகக் கலந்து சீரக பொடி,உப்பு,சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பாத்தி மாவு பதம் போல் பிசையவும்.
பிசைந்த மாவில் எல்லா பகுதிகளிலும் எண்ணெய்(ஒரு டேபிள் ஸ்பூன்) படுமாறு தடவவும்.
ஒரு ஈர துணி வைத்து மூடி கால் மணி நேரம் வைக்கவும்.
எண்ணையைக் கடாயில் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.
மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தேய்க்கவும்.
(மாவு சமமாக இருக்க வேண்டும்) எண்ணெய் நன்றாக சூடானதும் தேய்த்து வைத்துள்ள பூரியை போட்டு லேசாக கரண்டியால் பூரி ஓரங்களில் அழுத்தவும்.
இப்படி செய்வதால் உணவகத்தில் தரும் பூரியைப் போல பூரித்து இருக்கும்.



0 comments:
Post a Comment