தேவையான பொருட்கள்
- ரவை - 2 கப்
- வெங்காயம் - 2
- தக்காளி - 2
- பூண்டு - 6 பல்
- பட்டை - 2
- பிரியாணி இலை - 2
- கருவேப்பில்லை - 5 இலை
- கொத்தமல்லி - சிறிதளவு
- பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- உப்பு - தேவைக்கு
- முதலில் வெங்காயம், தக்காளியை நீளமாக அரிந்து கொள்ளவும்.
- பூண்டினை தோல் உரித்து வைக்கவும்.
- பச்சை மிளகாயினை இரண்டாக பிளந்து கொள்ளவும்.
- முதலில் நாண் ஸ்டிக் கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ரவையை வறுத்து தனியே வைக்கவும்.
- பிறகு அதே கடாயில் மீதி எண்ணெய் ஊற்றி பட்டை மற்றும் பிரியாணி இலை போட்டவும்.
- அதன் பின் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு சேர்க்கவும்.
- பிறகு வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும். பின் பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- பின்னர் 4 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- கொதி வந்தவுடன் வறுத்து தனியே வைத்துள்ள ரவையை இதில் கொட்டி கட்டி இல்லாமல் நன்றாக கிளறி தட்டு போட்டு முடி 5 நிமிடம் வேகவைக்கவும்.
- கடைசியில் கொத்தமல்லி தூவி நன்றாக கிளறவும்.
- இப்பொழுது சுவையான கிச்சடி ரெடி.
- இதனை தேங்காய சட்னி, பஜ்ஜியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Posted in: சிற்றுண்டி வகைகள்
0 comments:
Post a Comment