Tuesday, January 1, 2013

கிச்சடி

தேவையான பொருட்கள்
  • ரவை - 2 கப்
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 2
  • பூண்டு - 6 பல்
  • பட்டை - 2
  • பிரியாணி இலை - 2
  • கருவேப்பில்லை - 5 இலை
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • பச்சை மிளகாய் - 2
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு
செய்முறை
  • முதலில் வெங்காயம், தக்காளியை நீளமாக அரிந்து கொள்ளவும்.
  • பூண்டினை தோல் உரித்து வைக்கவும்.
  • பச்சை மிளகாயினை இரண்டாக பிளந்து கொள்ளவும்.
  • முதலில் நாண் ஸ்டிக் கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ரவையை வறுத்து தனியே வைக்கவும்.
  • பிறகு அதே கடாயில் மீதி எண்ணெய் ஊற்றி பட்டை மற்றும் பிரியாணி இலை போட்டவும்.
  • அதன் பின் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு சேர்க்கவும்.
  • பிறகு வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும். பின் பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் 4 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  • கொதி வந்தவுடன் வறுத்து தனியே வைத்துள்ள ரவையை இதில் கொட்டி கட்டி இல்லாமல் நன்றாக கிளறி தட்டு போட்டு முடி 5 நிமிடம் வேகவைக்கவும்.
  • கடைசியில் கொத்தமல்லி தூவி நன்றாக கிளறவும்.
  • இப்பொழுது சுவையான கிச்சடி ரெடி.
  • இதனை தேங்காய சட்னி, பஜ்ஜியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More