தேவையானவை:
உடைத்த கோதுமை_2 கப்
சின்ன வெங்காயம்_5
பச்சை மிளகாய்_2
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பச்சைப் பட்டாணி_1/2 கைப்பிடி(விருப்பமானால்)
தக்காளி_1/4 பாகம்
எலுமிச்சை சாறு_1 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
சின்ன வெங்காயம்_5
பச்சை மிளகாய்_2
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பச்சைப் பட்டாணி_1/2 கைப்பிடி(விருப்பமானால்)
தக்காளி_1/4 பாகம்
எலுமிச்சை சாறு_1 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
தாளிக்க:
நல்லெண்ணெய்_1 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப் பருப்பு
முந்திரி_5
பெருங்காயம்
கறிவேப்பிலை
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப் பருப்பு
முந்திரி_5
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.கோதுமையை நன்றாக சூடு வர வறுத்துக்கொள்ளவும். வெங்காயம்,இஞ்சி இவற்றைப் பொடியாகவும்,பச்சை மிளகாயை நீள வாக்கிலும் நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கித் தாளிக்க உள்ளப் பொருள்களைத் தாளித்து வெங்காயம்,பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.அடுத்து தக்காளி,பட்டாணி சேர்த்து வதக்கவும்.இவை நன்றாக வதங்கியதும் ஒன்றுக்கு இரண்டு என 4 கப்புகள் தண்ணீரை அளந்து ஊற்றவும்.மிதமானத் தீயில் மூடி போட்டு வேக விடவும்.
சிறிது நேரம் கழித்துத் தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும்.அப்போது பட்டாணி வெந்துவிட்டதா எனப் பார்த்து அது வெந்தவுடன் கோதுமையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும்.இது ரவை மாதிரி கட்டித் தட்டாது.எனவே பொறுமையாகவேக் கிளறலாம்.நன்றாகக் கிளறி உப்பு சேர்த்து மூடி மீண்டும் வேக வைக்கவும். அடிப் பிடிக்காதவாறு பார்த்துக்கொள்ளவும்.நன்றாக வெந்ததும் எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லித் தூவி இறக்கவும்.
இதற்கு தேங்காய் சட்னிதான் பெஸ்ட் காம்பினேஷன்.
0 comments:
Post a Comment