தேவை:
இஞ்சி_1 இன்ச் துண்டு
பூண்டு_1/2 பூண்டு
கொத்துமல்லி விதை_1/4 கப்
புளி_ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
வடகம்_1 டீஸ்பூன்
மிளகு_5
சீரகம்_1/4 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
காய்ந்த மிளகாய்_2
உப்பு_தேவையான அளவு
நல்லெண்ணெய்_2 டேபிள்ஸ்பூன்
பூண்டு_1/2 பூண்டு
கொத்துமல்லி விதை_1/4 கப்
புளி_ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
வடகம்_1 டீஸ்பூன்
மிளகு_5
சீரகம்_1/4 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
காய்ந்த மிளகாய்_2
உப்பு_தேவையான அளவு
நல்லெண்ணெய்_2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
இஞ்சியைத் தோல் சீவி சிறு துண்டுகளாக்கவும்.பூண்டையும் தோலெடுத்துவிட்டு சிறு துண்டுகளாக்கவும்.வெறும் வாணலியை அடுப்பில் வைத்து கொத்துமல்லி விதையை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.அதே வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி முதலில் வடகம் பிறகு மிளகு,சீரகம்,காய்ந்த மிளகாய்,பெருங்காயம் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து(கருகிப் போகாமல்)எடுத்துக்கொள்ளவும்.அடுத்து இஞ்சியை நன்றாக வதக்கவும்.வதங்கியதும் பூண்டை சேர்த்து வதக்கவும்.அடுத்து புளியை சேர்த்து வதக்கி இறக்கி ஆற வைக்கவும்.
ஆறியதும் இவை அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு உப்பு,தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். அதே வாணலியை அடுப்பில் வைத்து மீதமுள்ள எண்ணெயை ஊற்றி அரைத்த துவையலை அதில் போட்டு வதக்கவும். நன்கு கெட்டியாக ஆனதும் இறக்கி ஆறவைத்து எடுத்து வைக்கவும்.இந்த துவையலை இட்லி,தோசை,எல்லா வகையான சாதத்திற்கும் தொட்டுக்கொள்ளலாம்.சுவையாக இருக்கும்.
இஞ்சி,பூண்டு,மிளகு,சீரகம்,பெருங்காயம் இவை இருப்பதால் செரிமானத்திற்கும் நல்லது.
0 comments:
Post a Comment