தேவையானவை:
மாங்கொட்டை_2
புளி_பெரிய நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய்_5
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவைக்கு
புளி_பெரிய நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய்_5
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவைக்கு
வறுத்து சேர்க்க:
உளுந்து_ஒரு டீஸ்பூன்
தேங்காய் கீற்று_2
தேங்காய் கீற்று_2
செய்முறை:
மாங்கொட்டையை உடைத்து அதன் உள்ளே உள்ள பருப்பை சிறுசிறு துண்டுகளாக உடைத்து நீரில் ஊற வைக்கவும். குறைந்தது இரண்டுமூன்று மணி நேரம் ஊற வேண்டும்.அம்மி என்றால் பருப்பை ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை.
வெறும் வாணலில் உளுந்து,தேங்காய் இவற்றை அடுத்தடுத்து போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். விருப்பமில்லையானால் தேங்காய் சேர்க்க வேண்டாம்.
பிறகு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்.
இப்போது மாங்கொட்டை துவையல் தயார்.இது இட்லி,தோசை,சாத வகைகளுக்கு நன்றாக இருக்கும்.
0 comments:
Post a Comment