தேவையானவை:
- இனிப்பான மாம்பழங்கள்-4
- சர்க்கரை-150 கிராம்
- பால்-அரை லிட்டர்
- உடைத்த முந்திரிப் பருப்பு-1 டேபிள் ஸ்பூன்
- உலர்ந்த திராட்சை- அரை டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய்த்தூள்- சிறிதளவு
செய்முறை:
- மாம்பழங்களைக் கழுவி ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- சூடு ஆறியதும் தோல், கொட்டை இவற்றை நீக்கிவிட்டுச் சாறெடுத்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அத்துடன் சர்க்கரையையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
- நன்றாகக் கொதித்ததும் இறக்கி வைத்து முந்திரி கிஸ்மிஸ் பழங்களை நெய்யில் வறுத்து அத்துடன் சேர்த்து நன்றாக ஆற வைக்க வேண்டும்.
- பாலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி வைக்க வேண்டும்.
- மாம்பழச் சாறு ஆறியவுடன் பாலுடன் ஏலக்காய்ப் பொடியைத் தூவி கலக்கிவிட்டு பரிமாறவும்



0 comments:
Post a Comment