தேவையான பொருட்கள்:
- நாரில்லாத பலாச்சுளை-15
- சர்க்கரை-200 கிராம்
- முந்திரிப் பருப்பு-20
- ஏலக்காய் பொடி செய்தது- கால் டீ ஸ்பூன்
- நெய்-50 கிராம்
எப்படிச் செய்வது?
- பலாச்சுளைகளை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு நறுக்கிய பலாச்சுளைகளைப் போட்டு வதக்க வேண்டும்.
- நன்றாகப் பதம் ஆனவுடன் இறக்கி நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு அதில் சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கிளற வேண்டும்.
- முந்திரிப் பருப்பை நெய்விட்டு வறுத்துக் கொண்டு, மீதி உள்ள நெய்யையும்விட்டு நன்றாகக் கிளறிப் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது இறக்கி, வறுத்த முந்திரிப் பருப்பைப் போட்டு கிளறி வைக்க வேண்டும்.
- இப்போது கமகமக்கும் சுவையான பலாச்சுளை அல்வா ரெடி.
- சுவைக்குச் சுவை…ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியம்!



0 comments:
Post a Comment