தேவையானவை
- கோழிக்கறி – அரை கிலோ
- பூண்டு – 5
- பச்சைமிளகாய் – சிறிதளவு
- எண்ணெய் – 1 தேக்கரண்டி
- வினிகர் – 1 தேக்கரண்டி
- உப்பு – சிறிதளவு
செய்யும் முறை
- கோழிக்கறியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பூண்டையும், பச்சை மிளகாயையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் கோழிக்கறி, வினிகர், உப்பு, பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து கிளறி அரை மணி நேரம் ஊற விடவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் ஊறிய கோழிக்கறியைக் கொட்டி வதக்கவும். சிறிது நேரம் வாணலியை மூடி வைக்கவும்.
- கோழிக்கறி வெந்ததும் திறந்து மீண்டும் கிளறவும்.
- எல்லாம் ஒன்றாக கலந்து நன்றாக வெந்து சுண்டி வரும்போது இறக்கி வைக்க வேண்டும். சுவையான கோழிக்கறி கார வறுவல் தயார்.
0 comments:
Post a Comment