தேவையான பொருட்கள்:
- கடலை மாவு – 3 கப்
- அரிசி மாவு – 1கப்
- வெள்ளை எள் – 1/4 கப்
- பூண்டு – 10 பல் (அரைத்துக் கொள்ளவும்)
- வறுத்த நிலக்கடலை – 1 கை ( பொடித்து கொள்ளவும்)
- பெருங்காயத் தூள் – சிறிதளவு
- சோடா உப்பு – சிறிதளவு
- மிளகாய் தூள் – 3ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
- வெண்ணெய் – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- முதலில் இரண்டு மாவு வகைகளையும் சல்லடையில் சலித்துக் கொள்ளவும்…ஏனென்றால் அதில் ஏதும் இருந்தால் எண்ணெய்யில் பொரிக்கும் போது வெடிக்கும் வாய்ப்புள்ளது.
- மாவுடன் எள், பூண்டு, நிலக்கடலை, பெருங்காயத் தூள், சோடா உப்பு, மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை தண்ணீர் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.
- பின்பு வெண்ணெய், சிறிது எண்ணெய் சூடாக்கி மாவுக் கலவையுடன் கொட்டி தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்..
- நன்கு காய்ந்தவுடன் அச்சில் மாவை வைத்து எண்ணெய்யில் பிளியவும்…
- நன்கு சிவந்தவுடன் எடுக்கவும்.
- சுவையான ஓலை பக்கோடா தயார்!
0 comments:
Post a Comment