தேவையான பொருட்கள்:
- வரகரிசி - 250கிராம்
- பாசிபருப்பு-50கிராம்
- வெல்லம்-300கிராம்
- முந்திரி-25கிராம்
- திராட்சை-25கிராம்
- நெய்-2 தேக்கரண்டி
- பால்-1 கப்
- தேங்காய் -தேவையான அளவு
- ஏலக்காய் பொடி-சிறிதளவு
- உப்பு-அரை தேக்கரண்டி
செய்முறை:
- வரகு அரிசியைப், பாசிப்பருப்பை லேசாய் வறுக்கவும்.
- தண்ணீரை கொதிக்க வைத்து, வறுத்த பாசிப்பருப்பை முதலில் போடவும்.
- பின்னர், வரகு அரிசியை போட்டு குழைய வேகவிடவும்.
- வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டிய பாகை அரிசி கலவையில் விட்டு, நன்கு கிளறி கொதிக்க விடவும்.
- பின் அதில் வறுத்த முந்திரி, திராட்சை , ஏலக்காய் பொடி, தேங்காய்,நெய், மில்க் மெய்ட் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
- சுவையான வரகரிசி சர்க்கரை பொங்கல் ரெடி.
0 comments:
Post a Comment