தேவையான பொருட்கள்
- பாகற்காய் - 100 கிராம்
- புளிகரைச்சல் - 2 டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
- தேங்காய்ப்பால் - 2 டேபிள்ஸ்பூன்
- மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூன்
- மிளகாய்ப்பொடி - 1/2 டீஸ்பூன்
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- பச்சைமிளகாய் - 2
- கறிவேப்பிலை - சிறிது
- எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
- உப்பு - சுவைக்கு
- வெல்லம் - சிறுதுண்டு
- பாகற்காயை நடுவில் நறுக்கி, கத்தியால் விதைகளை நீக்கிக்கொள்ளவும். இதனை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
- பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒரு வாணலியில் போட்டு எண்ணெய் விட்டு வதக்கவும்.
- அத்துடன் நறுக்கிய பாகற்காய் சேர்த்து கிளறவும்.
- மசாலாபொடிகள், உப்பு சேர்த்து கிளறவும்.
- புளிகரைச்சலுடன் வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.
- நன்கு கொதித்ததும், தேங்காய்ப்பால், சிறிது நீர் சேர்த்து அடுப்பை சிறுதீயில் வைக்கவும்.
- பாகற்காய் வெந்து, நீரும் வற்றி, எண்ணெய் பிரிந்ததும் இறக்கி விடவும்
Posted in: கூட்டு வகைகள்
0 comments:
Post a Comment