தேவையான பொருட்கள்
- புளி - லெமென் சைஸ்
- தக்காளி - ஒன்று
- துவரம் பருப்பு - 1 1/2 மேசைக்கரண்டி (வேக வைத்தது)
- மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கு
- வறுத்து அரைக்க:
- நெய் - ஒரு தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - ஒன்று
- மிளகு - 9
- சீரகம் - ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- பூண்டு - இரண்டு பல்
- முழு தனியா - ஒரு மேசைக்கரண்டி
- இஞ்சி - இரண்டு அங்குல துன்டு
- தாளிக்க:
- எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
- கடுகு - அரை தேக்கரண்டி
- கறிவேப்பிலை - ஐந்து ஆர்க்
- வெந்தயம் - மூன்று
- கொத்தமல்லி தழை - சிறிது
- துவரம் பருப்பை அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ள வேண்டும்.
- புளியை நன்கு மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து அதில் தக்காளி பழத்தை இரண்டாக (அ) நான்காக நறுக்கி போட்டு உப்பு அரை தேக்கரண்டி, மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி போட்டு கொதிக்க விட வேண்டும்.
- வறுத்து அரைக்க கொடுத்துள்ளவைகளை தனியாக நெய்யில் வறுத்து ஆறியதும் அரைத்து தண்ணீர் அரை டம்ளர் சேர்த்து அரைத்து ஊற்றி கொள்ளுங்கள்.
- உப்பு பார்த்து விட்டு கடைசியில் கூட சேர்த்து கொள்ளுங்கள்
- தக்காளி வெந்ததும் வறுத்து அரைத்து வைத்துள்ளதையும் போட்டு, வேக வைத்த பருப்பு தண்ணியும் ஊற்றி கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
- கடைசியில் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து கொட்டி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
Posted in: ரச வகைகள்




0 comments:
Post a Comment