Tuesday, January 1, 2013

இறால் ஊறுகாய்

தேவையான பொருட்கள்
  • இறால் - 1/4 கி
  • இஞ்சி பூண்டு விழுது 2 தே . க
  • மிளகாய் தூள் - 2 தே. க
  • மஞ்சள் தூள் - 1 தே. க
  • நல்லெண்ணெய் - 200 கி
  • வினிகர் - 1/2 கப்
  • உப்பு - 1 ( அ) 11/2 தே. க
  • வறுத்து பொடிக்க
  • கடுகு - 1 ஸ்பூன்
  • சோம்பு - 1 ஸ்பூன்
  • வெந்தயம் - 1/2 ஸ்பூன்
 செய்முறை
  • முதலில் இறாலை சுத்தமாக கழுவி , கொஞ்சம் உப்பு,ம.தூள் மி.தூள் இஞ்சி பூண்டு விழுது பிசறி அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
  • ஒரு கடாயில் பாதி எண்ணெய் விட்டு காய்ந்ததும் இறலை போட்டு நன்கு சிவக்க பொரித்து ஆற விடவும்
  • இறாலை பொரித்த எண்ணெயுடன் மீதி எண்ணெயை ஊற்றி . சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். அடுத்து பொரித்த இறால் ம.தூள் மி.தூள் போட்ட்டு 5 நிமிடம் கிண்டி விடவும். பின்பு வினிகர் உப்பு சேர்த்து இறக்கி விடவும். மேலாக வறுத்து பொடித்த பொடியை கின்டி ஆற வைத்து பாடிலில் போட்டு வைக்கவும். ஊறுகாய்க்கு மேலே 1 இஞ்ச் உயரத்திற்க்கு எண்ணெய் இருக்க வேண்டும்.
  • பாட்டிலின் வாயை வெள்ளை துணியால் மூடி மூன்று நாள் கழித்து உபயோகபடுத்தலாம் உப்பு காரம், புளிப்பு போன்றவை அவரவர் ருசிக்கேற்ப்ப சேர்த்துக் கொள்ளலாம் இந்த ஊறுகாய் 2 மாதம் வரை கெடாமல் இருக்கும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More