தேவையான பொருட்கள்;-
பாசிப்பருப்பு -1 கப்தேங்காய் துருவல் -2 ஸ்பூன்
கேரட் வெள்ளரி -2
பச்சை மிளகாய் -2
எலுமிச்சை பழம் -1
இஞ்சி -சிறிதளவு
செய்முறை :
(விரும்பினால் முட்டைக்கோஸ்,பீட்ரூட்,முள்ளங்கியையும் சேர்த்துக் கொள்ளலாம்)
1.பாசிப்பருப்பை தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
2.காய்கறிகளை மெல்லியதாக துருவிக் கொள்ள வேண்டும்.
3.பச்சை மிளகாய் இஞ்சியை பொடியாக நறுக்கவும்.
4.பருப்பு நன்கு ஊறியதும், தண்ணீர் இல்லாமல் வடிகட்டி அதில் கேரட் வெள்ளரி பச்சை மிளகாய் இஞ்சி கொத்தமல்லி போட்டு கிளற வேண்டும்
5.சட்டியை அடுப்பில் வைத்து கடுகு வரமிளகாய் பெருங்காயம் போட்டு தாளித்துக் கொட்டவும்.
6.உப்பு தேவையான அளவு சேர்த்து எலுமிச்சம் பழத்தை பிழிந்துவிட்டால் கோசம்பரி ரெடி.
பாசிப்பருப்புக்கு பதில் கடலைப் பருப்பும் சேர்க்கலாம்.
0 comments:
Post a Comment