Tuesday, January 1, 2013

முருங்கைக்கீரை பிரியாணி

தேவையானவை: 

பாசுமதி அரிசி - ஒரு கப், முருங்கைக்கீரை (இலை மட்டும்) - ஒன்றரை கப், வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - ஒன்று, பிரிஞ்சி இலை - ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், நெய் - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



 
செய்முறை: 

அரிசியைக் கழுவி, தண்ணீர் விட்டு ஊற வைத்து, சாதம் வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடா னதும் பிரிஞ்சி இலையை சேர்க்கவும். கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், உப்பு, முருங்கைக்கீரை, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கிளறவும். கீரை வதங்கியதும் கரம் மசாலாத்தூள் சேர்த்து கலக்கவும். பச்சை வாசனை போய் நல்ல மணம் வரும் சமயம் சாதத்தை உதிர்த்துப் போட்டு கலக்கவும். பிறகு, நெய் விட்டு கலந்து, குறைந்த தீயில் 2 நிமிடம் வைத்து எடுக்கவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More