9:05 PM
Agri
தேவையானவை:
- உளுந்து – 200 கிராம்
- பச்சரிசி – 50 கிராம்
- வனஸ்பதி – 250 கிராம்
- ரீபைண்ட் ஆயில் – கால் லிட்டர்
- நெய் – 150 கிராம்
- சர்க்கரை – அரைகிலோ
- தண்ணீர் – ஒரு லிட்டர்
- எலுமிச்சம் பழத்தில் பாதி மட்டும்.
செய்முறை:
- முதலில் சர்க்கரையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிட்டு ஜீராவாக காய்ச்சி வைத்து கொள்ள வேண்டும்.
- அடுத்து கால் மணி நேரம் ஊற வைத்த உளுத்தம் பருப்பையும்,
பச்சரிசியையும் கிரைண்டரில் போட்டு நன்கு நைஸ் பதத்துக்கு மாவை ஆட்டி
எடுத்து வைக்க வேண்டும்.
- இப்போ ஜீராவும், ஜிலேபி மாவும் ரெடி.
- சூடான எண்ணெய் சட்டியில் ரீபைண்ட் ஆயிலுடன் நெய்யை சேர்த்துவிட்டு, அதில் பாதி எலுமிச்சம் பழத்தையும் பிழிந்துவிட வேண்டும்.
- எண்ணெய் சட்டி நன்கு காய்ந்தவுடன் ரெடியாக இருக்கும் ஜிலேபி மாவை பிழிய வேண்டும்.
- சிறிய ஓட்டையுடன் இருக்கும் துணியில் கையளவு மாவை எடுத்து கொண்டு, கொலுசு மாதிரி சிறிய சிறிய வளையங்களாக ஒரே சீராக பிழிய வேண்டும்.
- சுவையான ஜிலேபி தயார்!
0 comments:
Post a Comment