Thursday, January 3, 2013

திண்டுக்கல் ஜிலேபி


Posted Image
தேவையானவை:
  • உளுந்து – 200 கிராம்
  • பச்சரிசி – 50 கிராம்
  • வனஸ்பதி – 250 கிராம்
  • ரீபைண்ட் ஆயில் – கால் லிட்டர்
  • நெய் – 150 கிராம்
  • சர்க்கரை – அரைகிலோ
  • தண்ணீர் – ஒரு லிட்டர்
  • எலுமிச்சம் பழத்தில் பாதி மட்டும்.
செய்முறை:
  • முதலில் சர்க்கரையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிட்டு ஜீராவாக காய்ச்சி வைத்து கொள்ள வேண்டும்.
  • அடுத்து கால் மணி நேரம் ஊற வைத்த உளுத்தம் பருப்பையும், பச்சரிசியையும் கிரைண்டரில் போட்டு நன்கு நைஸ் பதத்துக்கு மாவை ஆட்டி எடுத்து வைக்க வேண்டும்.
  • இப்போ ஜீராவும், ஜிலேபி மாவும் ரெடி.
  • சூடான எண்ணெய் சட்டியில் ரீபைண்ட் ஆயிலுடன் நெய்யை சேர்த்துவிட்டு, அதில் பாதி எலுமிச்சம் பழத்தையும் பிழிந்துவிட வேண்டும்.
  • எண்ணெய் சட்டி நன்கு காய்ந்தவுடன் ரெடியாக இருக்கும் ஜிலேபி மாவை பிழிய வேண்டும்.
  • சிறிய ஓட்டையுடன் இருக்கும் துணியில் கையளவு மாவை எடுத்து கொண்டு, கொலுசு மாதிரி சிறிய சிறிய வளையங்களாக ஒரே சீராக பிழிய வேண்டும்.
  • சுவையான ஜிலேபி தயார்!

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More