தேவையான பொருட்கள்
- பச்சரிசி - 1 கப்
- துவரம்பருப்பு - 1/2 கப்
- கொண்டைக்கடலை - 1/2 கப்
- வற்றல் மிளகாய் - 7
- பெருங்காயம் - 1 ஸ்பூன்
- துருவிய தேங்காய் - 1/4 கப்
- பச்சை மிளகாய் - 2
- உப்பு
- கொண்டைக்கடலையை 8 மணிநேரம் ஊற வைக்கவும்.
- அரிசி, துவரம்பருப்பு, கொண்டைக்கடலை, மிளகாயை நறநறவென்று அரைக்கவும்.
- அதனுடன் உப்பு,பெருங்காயம், தேங்காய் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.
- தோசைக்கல் காய்ந்ததும் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தோசைபோல வட்டமாக அடை வார்க்கவும்.
- அதன் நடுவே தோசைக்கரண்டியால் சிறிது துளையிட்டு நடுவிலும் ஓரங்களிலும் சிறிது எண்ணெய் ஊற்றி இரண்டுபுறமும் திருப்பிவிட்டு வெந்ததும் பரிமாறவும்.
Posted in: சிற்றுண்டி வகைகள்
0 comments:
Post a Comment