Thursday, January 3, 2013

சேமியா உப்புமா


தேவையானப் பொருள்கள்:

சேமியா_2 கப் அளவிற்கு
சின்ன வெங்காயம்_5 லிருந்து 10
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய்_2
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ண்ய்_ஒரு டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப் பருப்பு
சீரகம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்.

சேமியாவை வெறும் வாணலியில் சூடுவர வறுத்துக்கொள்.அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து,வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து வதக்கி மூன்றரை கப் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு மூடி வேக வை.ஒரு கொதி வந்ததும் திறந்து சேமியாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கிளறு.தீ மிதமாக இருக்கட்டும்.மூடி வேக வை.சிறிது நேரம் கழித்து தண்ணீர் வற்றியதும் எலுமிச்சை சாறு விட்டு கொத்துமல்லி தூவி ஒரு முறை கிளறி இறக்கு.

இதற்கு தொட்டு சாப்பிட தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

குறிப்பு:

சேமியா உப்புமாவிற்கு தண்ணீர் சேர்க்கும்போது ரவைக்கு சேர்ப்பதை விட கொஞ்சம் குறைவாக சேர்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More