தேவையான பொருட்கள்
- கத்திரிக்காய் - கால் கிலோ
- வெங்காயம் - கால் கிலோ
- கருவாடு - 50 கிராம்
- தக்காளி - 2 பெரியது
- மிளகாய் - 4
- பூண்டு - 4 பல் (தட்டிக்கொள்ள)
- மிளகாய்த்தூள் - 1 - 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- மல்லி, கறிவேப்பிலை - சிறிது
- எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
- கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
- உப்பு - தேவைக்கு
- கத்திரிக்காய், வெங்காயம், மிளகாய், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- கருவாட்டை கழுவி சிறிய துண்டாக்கி கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு வெடித்தவுடன், கறிவேப்பிலை, மிளகாய், தட்டிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு கத்திரிக்காய், சிறிது உப்பு சேர்க்கவும்.
- கத்திரிக்காய், வெங்காயம் வதங்கியதும் தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பிரட்டி விடவும். பின்பு கருவாடு சேர்த்து சிம்மில் 10 நிமிடம் மூடி போடவும். பின்பு திறந்து மல்லி இலை தூவவும்.
- சுவையான கமகமக்கும் கருவாடு கத்திரிக்காய் பொரியல் ரெடி.
Posted in: பொரியல் வகைகள்
0 comments:
Post a Comment