Tuesday, January 1, 2013

கருவாடு கத்திரிக்காய் பொரியல்

தேவையான பொருட்கள்


  • கத்திரிக்காய் - கால் கிலோ
  • வெங்காயம் - கால் கிலோ
  • கருவாடு - 50 கிராம்
  • தக்காளி - 2 பெரியது
  • மிளகாய் - 4
  • பூண்டு - 4 பல் (தட்டிக்கொள்ள)
  • மிளகாய்த்தூள் - 1 - 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
  • மல்லி, கறிவேப்பிலை - சிறிது
  • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
  • கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு
செய்முறை
  • கத்திரிக்காய், வெங்காயம், மிளகாய், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கருவாட்டை கழுவி சிறிய துண்டாக்கி கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு வெடித்தவுடன், கறிவேப்பிலை, மிளகாய், தட்டிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு கத்திரிக்காய், சிறிது உப்பு சேர்க்கவும்.
  • கத்திரிக்காய், வெங்காயம் வதங்கியதும் தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பிரட்டி விடவும். பின்பு கருவாடு சேர்த்து சிம்மில் 10 நிமிடம் மூடி போடவும். பின்பு திறந்து மல்லி இலை தூவவும்.

  • சுவையான கமகமக்கும் கருவாடு கத்திரிக்காய் பொரியல் ரெடி.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More