தேவையான பொருட்கள்
செய்முறை
- பாஸ்மதி அரிசி - கால்கிலோ
- உறித்த பச்சைப்பட்டாணி - 50 கிராம்
- கேரட் - 50 கிராம்
- பீன்ஸ் - 50 கிராம்
- கோஸ் - 50 கிராம்
- குடைமிளகாய் - 50 கிராம்
- வெங்காயம் - 2
- தக்காளி - 2
- பூண்டு - 8 பல்
- மஞ்சத்தூள் - அரைடீஸ்பூன்
- மிளகாத்தூள் - ஒருஸ்பூன்
- கரம் மசாலாத்தூள் - ஒருஸ்பூன்
- இஞ்சி - சிறிய துண்டு
- நெய், வெண்ணெய் - 2+2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கொத்துமல்லித்தழை - ஒரு சிறிய கட்டு
செய்முறை
- அரிசியை நன்கு கழுவி குறைந்தது அரை மணி நேரமாவது ஊறவைக்கவும்.
- எல்லா காய்களையும் பொடிசாக அறிந்து கொள்ளவும்.
- இஞ்சி, பூண்டு, வெங்காயம் மிக்சியில் நைசாக அரைத்துக்கொள்ளவும்.
- குக்கரில் வெண்ணெய் போட்டு காய்களை மிருதுவாக வதக்கவும்.
- வதங்கியதும்,மஞ்சப்பொடி,கரம் மசாலாப்பொடி,மிளகாத்தூள் போட்டு வதக்கவும்.அரைத்த விழுதைச்சேர்க்கவும்.
- அதன்மேல் ஊறின அரிசியைச்சேர்த்து நன்கு கிளறவும்.
- உப்பையும் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் 2 விசில் வரும்வரை வேகவிடவும்.
- ஆறினதும்,குக்கரைத்திறந்து பொடிசாக நறுக்கிய கொத்துமல்லி, நெய் போட்டு நன்கு கலக்கவும்.
- சூடாகப்பரிமாறவும்
Posted in: பிரியாணி வகைகள்




0 comments:
Post a Comment