Tuesday, January 1, 2013

ஓட்ஸ் பிரியாணி

என்னென்ன தேவை?
ஓட்ஸ் - 2 கப், 
பொடியாக நறுக்கிய வெங்காயம், 
தக்காளி - தலா 1 கப், 
பொடியாக நறுக்கிய பீன்ஸ், 
கேரட், முட்டைகோஸ், 
பச்சை பட்டாணி சேர்த்த கலவை - 1 கப், 
இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன், 
பச்சை மிளகாய் - 2, 
பட்டை, ஏலக்காய், 
கிராம்பு - தலா 2, நெய், 
எண்ணெய் - தலா 2 டீஸ்பூன், 
மிளகாய் தூள் - சிறிது, 
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், 
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிது, 
எலுமிச்சை சாறு - தேவைக்கேற்ப, 
முந்திரி - 6, உப்பு - தேவைக்கேற்ப.


எப்படிச் செய்வது?
ஓட்ஸை வெறும் கடாயில் லேசாக வறுக்கவும். பிறகு கொதிக்கும் தண்ணீரில் போட்டு, உடனே வடிகட்டவும். கடாயில் நெய், எண்ணெய் விட்டு, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கி, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் காய்கறிக் கலவை, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். காய்கறிக் கலவை நன்கு வெந்ததும், வடித்து வைத்துள்ள ஓட்ஸை கொட்டி, மெதுவாகக் கலந்து, கிளறி, இறக்கியதும், எலுமிச்சை சாறு சேர்த்து, கொத்தமல்லித் தழை மற்றும் வறுத்த முந்திரியால் அலங்கரித்துப் பரிமாறவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More