- சீரக சம்பா அரிசி - 1/2 கிலோ,
- மட்டன் - 1/2 கிலோ,
- பெரிய வெங்காயம் - 2,
- தக்காளி - 2,
- இஞ்சி, பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி,
- தயிர் - 1 கப்,
- மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி,
- பட்டை - சிறிது,
- கிராம்பு - 2,
- ஏலக்காய் - 2,
- எலுமிச்சம் பழம் - 1/2 மூடி,
- எண்ணெய் - 1/4 கப்,
- நெய் - 3 மேசைக்கரண்டி,
- டால்டா - 3 மேசைக்கரண்டி,
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை- வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
- அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
- பெரிய பாத்திரத்தில் எண்ணெயை விட்டு, காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
- வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துவதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி வதங்கி கரைந்ததும், மட்டன் சேர்த்து வதக்கவும்
- நன்கு வதங்கிய பின் மிளகாய்த்தூள், தயிர், எலுமிச்சம் பழ சாறு சேர்த்து, 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
- தண்ணீர் கொதிக்கும் போது ஊற வைத்த அரிசியைப் போடவும்.
- அரிசி பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும்.
- அர்சி வெந்தது, நெய், டால்டா சேர்த்து கிளறி இறக்கவும்
Posted in: பிரியாணி வகைகள்



0 comments:
Post a Comment