Tuesday, January 1, 2013

தலப்பா கட்டு மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்
  • சீரக சம்பா அரிசி - 1/2 கிலோ,
  • மட்டன் - 1/2 கிலோ,
  • பெரிய வெங்காயம் - 2,
  • தக்காளி - 2,
  • இஞ்சி, பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி,
  • தயிர் - 1 கப்,
  • மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி,
  • பட்டை - சிறிது,
  • கிராம்பு - 2,
  • ஏலக்காய் - 2,
  • எலுமிச்சம் பழம் - 1/2 மூடி,
  • எண்ணெய் - 1/4 கப்,
  • நெய் - 3 மேசைக்கரண்டி,
  • டால்டா - 3 மேசைக்கரண்டி,
  • உப்பு - தேவையான அளவு.
செய்முறை
  • வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
  • அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
  • பெரிய பாத்திரத்தில் எண்ணெயை விட்டு, காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
  • வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துவதக்கவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி வதங்கி கரைந்ததும், மட்டன் சேர்த்து வதக்கவும்
  • நன்கு வதங்கிய பின் மிளகாய்த்தூள், தயிர், எலுமிச்சம் பழ சாறு சேர்த்து, 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
  • தண்ணீர் கொதிக்கும் போது ஊற வைத்த அரிசியைப் போடவும்.
  • அரிசி பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும்.
  • அர்சி வெந்தது, நெய், டால்டா சேர்த்து கிளறி இறக்கவும்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More