Tuesday, January 1, 2013

ஆட்டுக்கால் சூப்

தேவையான பொருட்கள்
  • ஆட்டுக்கால் - நான்கு
  • வெங்காயம் - இரண்டு
  • இஞ்சி - ஒரு துண்டு
  • பூண்டு - நான்கு பற்கள்
  • தக்காளி - இரண்டு
  • மிளகு - ஒரு தேக்கரண்டி
  • பச்சைமிளகாய் - நான்கு
  • காய்ந்த மிளகாய் - இரண்டு
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • கொத்தமல்லி - ஒரு பிடி
  • மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
  • தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
  • உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
  • சோம்பு - ஒரு தேக்கரண்டி
  • பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா இரண்டு

செய்முறை
  • ஆட்டுக்காலை இடுக்கியால் பிடித்துக் கொண்டு ஒவ்வொன்றாக அடுப்பில் வாட்டி தீய்த்து வைத்துக் கொள்ளவும்.
  • சூடு ஆறுவதற்கு முன்பாக கத்தியை கொண்டு மேல்பாகத்தை சுரண்டி எடுத்து கழுவிக்கொள்ளவும்.
  • பிறகு வேண்டிய துண்டுகள் போட்டு வைத்துக் கொள்ளவும்.
  • இதனுடன் நசுக்கிய இஞ்சி, பூண்டு, மிளகு, நறுக்கிய பாதி வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, கொத்தமல்லி மற்றும் மஞ்சள்தூள், தனியாத்தூள், உப்புத்தூளை போட்டு இரண்டு லிட்டர் தண்ணீரை ஊற்றி வேகவைக்கவும்.
  • நன்கு வெந்து குழம்பானவுடன் சட்டியில் எண்ணெயை காயவைத்து வாசனை பொருட்களை போட்டு பிறகு காய்ந்த மிளகாய், மீதமுள்ள வெங்காயம், கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
  • இதை சூப்பில் ஊற்றி நன்கு கலந்து மூடி போட்டு அடுப்பின் அனலை குறைத்து விடவும்.
  • அரைமணி நேரம் கழித்து நன்கு கலக்கிவிட்டு இறக்கி விடவும்.
  • கோப்பைகளில் ஊற்றி மிதமான சூட்டில் பரிமாறவும். அல்லது ஆப்பத்திற்கு பக்க உணவாக பரிமாறவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More