தேவையான பொருட்கள்
செய்முறை
- ஆட்டுக்கால் - நான்கு
- வெங்காயம் - இரண்டு
- இஞ்சி - ஒரு துண்டு
- பூண்டு - நான்கு பற்கள்
- தக்காளி - இரண்டு
- மிளகு - ஒரு தேக்கரண்டி
- பச்சைமிளகாய் - நான்கு
- காய்ந்த மிளகாய் - இரண்டு
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- கொத்தமல்லி - ஒரு பிடி
- மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
- தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
- உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
- சோம்பு - ஒரு தேக்கரண்டி
- பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா இரண்டு
செய்முறை
- ஆட்டுக்காலை இடுக்கியால் பிடித்துக் கொண்டு ஒவ்வொன்றாக அடுப்பில் வாட்டி தீய்த்து வைத்துக் கொள்ளவும்.
- சூடு ஆறுவதற்கு முன்பாக கத்தியை கொண்டு மேல்பாகத்தை சுரண்டி எடுத்து கழுவிக்கொள்ளவும்.
- பிறகு வேண்டிய துண்டுகள் போட்டு வைத்துக் கொள்ளவும்.
- இதனுடன் நசுக்கிய இஞ்சி, பூண்டு, மிளகு, நறுக்கிய பாதி வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, கொத்தமல்லி மற்றும் மஞ்சள்தூள், தனியாத்தூள், உப்புத்தூளை போட்டு இரண்டு லிட்டர் தண்ணீரை ஊற்றி வேகவைக்கவும்.
- நன்கு வெந்து குழம்பானவுடன் சட்டியில் எண்ணெயை காயவைத்து வாசனை பொருட்களை போட்டு பிறகு காய்ந்த மிளகாய், மீதமுள்ள வெங்காயம், கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
- இதை சூப்பில் ஊற்றி நன்கு கலந்து மூடி போட்டு அடுப்பின் அனலை குறைத்து விடவும்.
- அரைமணி நேரம் கழித்து நன்கு கலக்கிவிட்டு இறக்கி விடவும்.
- கோப்பைகளில் ஊற்றி மிதமான சூட்டில் பரிமாறவும். அல்லது ஆப்பத்திற்கு பக்க உணவாக பரிமாறவும்.
Posted in: சூப் வகைகள்
0 comments:
Post a Comment