Tuesday, January 1, 2013

சிக்கன் சூப்

தேவையான பொருட்கள்

  • சிக்கன் (வெட்டி சுத்தம் செய்ததுண்டுகள்) - 250 கிராம்
  • பெருஞ்சீரகம்(சோம்பு) - ஒரு தேக்கரண்டி
  • மிளகு - 3 தேக்கரண்டி
  • வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
  • சின்னசீரகம்(சீரகம்) - ஒரு தேக்கரண்டி
  • மல்லி(தனியா) - ஒரு தேக்கரண்டி
  • செத்தல்மிளகாய் (காய்ந்தமிளகாய்) - 2
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
  • உள்ளி (பூண்டு) - 4 பற்கள்
  • சின்னவெங்காயம் - 2
  • தக்காளிப்பழம் - ஒன்று
  • கருவப்பட்டை(பட்டை) - சிறிதளவு
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • தயிர் - சிறிதளவு
  • தண்ணீர் - சிறிதளவு
செய்முறை
  • ஒரு சிறியபாத்திரத்தில் தயிர், உப்பு, தண்ணீர், ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கினால் மோராகிவிடும் .
  • பின்பு ஒரு பெரிய பாத்திரத்தில் சுத்தமாக்கிய சிக்கன் துண்டுகளை போட்டு அதன் மேல் மோரை விடவும். இதில் உள்ள மோர் கலவையினால் சிக்கனை நன்றாக கழுவவும்.
  • பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கவும். தாட்சி(வாணலி)சூடானதும் அதில் சின்னசீரகம்(சீரகம்), மல்லி(தனியா), செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்) கடலைப்பருப்பு, மிளகு ஆகியவற்றை போட்டு நன்றாக வறுக்கவும்.
  • நன்றாக வறுத்த பின்பு அதில் வெந்தயத்தை போட்டு கலக்கவும். கலந்த பின்பு இறக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும்.
  • இவையாவும் ஆறிய பின்பு இதனை கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு மாவாக்கவும் (பவுடராக்கவும்).
  • பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து அதனை சூடாக்கவும். தாட்சி (வாணலி) சூடானதும் அதில் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
  • எண்ணெய் சூடானதும் மோரில் கழுவிய சிக்கனை போட்டு வதக்கவும்.
  • வதக்கிய சிக்கனுடன் நறுக்கிய தக்காளிப்பழம், சின்ன வெங்காயம், உள்ளி(பூண்டு), கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.
  • பின்பு இவற்றுடன் மாவாக்கியவற்றை (பவுடராக்கியவற்றை) போட்டு நன்றாக கலக்கவும்.
  • கலந்த பின்பு இதனுடன் (2-3) டம்ளர் தண்ணீர் விட்டு அதனுடன் உப்பு போட்டு இவையாவற்றையும் நன்றாக வேகவிடவும்.
  • பின்பு அடுப்பில் இன்னொரு தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கவும்.
  • சூடாக்கிய பின்பு அதில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
  • எண்ணெய் சூடானதும் அதில் பெருஞ்சீரகம்(சோம்பு), கருவப்பட்டை(பட்டை), கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
  • தாளித்த பின்பு இவற்றை சிக்கனில் போட்டு கலக்கவும். அதன் பின்பு அதனை இறக்கி வைத்துவிடவும்.
  • தாட்சியை(வாணலியை)இறக்கிய பின்பு சுவையான, சத்துகள் நிறைந்த சிக்கன் சூப் தயாராகிவிடும்.
  • சிக்கன் சூப் தயாராகிவிட்ட பின்பு இதனை சூப் பரிமாறும் கோப்பையில் ஊற்றி பரிமாறவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More