தேவையான பொருட்கள்
- பெரிய மாங்காய் - ஒரு டஜன்
- கடுகு - கால் ஆழாக்கு
- மிளகாய்பொடி - ஒன்றரை ஆழாக்கு
- உப்பு - ஒன்றரை ஆழாக்கு
- நல்லெண்ணெய் - ஒன்றரை ஆழாக்கு
- வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
- கொத்துக் கடலை - ஒரு பிடி
- கடுகையும், உப்பையும், தனித்தனியாக காயவைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். எண்ணெயை வெயிலில் காய வைக்கவும்.
- மாங்காயை விதையோடு எட்டாக அறிந்து வைத்துக் கொள்ளவும். கடுகையும், உப்பையும் தனித்தனியாக பொடித்து வைக்கவும்.
- கடுகுப் பொடி, உப்புத் தூள், மிளகாய்ப் பொடி இவற்றைத் சேர்த்து நன்றாகக் பிசைந்து கொள்ளவும்.
- பாத்திரத்தில் பிசறி வைத்த பொடியை முதலில் போட்டு அதன் மேல் மாங்காயை போட்டு அதனுடன் காயவைத்த எண்ணெயை ஊற்றவும்.
- அதன் பிறகு மீதம் உள்ள பொடியை அதன் மேல் போட்டு மாங்காய் துண்டங்களையும் போட்டு எண்ணெயை நன்றாக ஊற்றி கலக்காமல் வைக்கவும்.
- ஒரு நாள் கழித்து அதனுடன் வெந்தயத்தையும், கொத்துக் கடலையையும் போட்டுக் கிளறிவிடவும்.
- தினமும் திறந்து கிளறிவிட்டு, பிறகு 4 நாட்களுக்கு ஒரு முறை வெயிலில் வைத்து எடுக்கவும்.
- ஒரு சிறு கிண்ணத்தில் சிறிது சிறிதாக எடுத்து உபயோகப்படுத்தவும்.
Posted in: ஊறுகாய் வகைகள்




0 comments:
Post a Comment