Monday, December 31, 2012

ஃபிர்ணி

என்னென்ன தேவை?
பால் - 1 லிட்டர், 
பாசுமதி அரிசி - அரை கப், 
சர்க்கரை - 1 கப், 
தோல் நீக்கி, சீவிய பாதாம் - 8, 
சீவிய பிஸ்தா - 8, 
ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன், 
பன்னீர் (ரோஸ் வாட்டர்) - சிறிது, 
மிட்டாய்களின் மேல் அலங்கரிக்கிற சில்வர் பேப்பர் - 1, 
பன்னீர் ரோஜா இதழ்கள் - சிறிது.


எப்படிச் செய்வது?
பாசுமதி அரிசியை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைத்து, மிக்சியில் நைசாக அரைக்கவும். பாலைக் காய வைத்து, அதில் அரைத்த விழுது சேர்த்து, மிதமான தீயில் கை விடாமல் கிளறவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்து, இரண்டும் நன்கு கொதிக்கும்போது, சிறிது பாதாம், பிஸ்தாவை அலங்கரிக்கத் தனியே எடுத்து வைத்துக் கொண்டு, மீதியைச் சேர்க்கவும். ஏலக்காய் தூள் சேர்க்கவும். இறக்கி வைத்து ரோஸ் வாட்டர் (பன்னீர்) சேர்த்து, ரோஜா இதழ்களைத் தூவிக் குளிர வைத்து, பிறகு சில்வர் ஷீட்டால் அலங்கரித்துப் பரிமாறவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More