Thursday, January 3, 2013

உளுந்து சப்பாத்தி


தேவையானவை:
  • கோதுமை மாவு – ஒரு கப்
  • சோயா மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
  • கடுகு – அரை டீஸ்பூன்
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு.

பூரணத்திற்கு தேவையானவை:

  • உளுந்து – கால் கப்
  • காய்ந்த மிளகாய் – 2
  • சோம்பு – கால் டீஸ்பூன்
  • தேவையான அளவு உப்பு.

செய்முறை:

  • கோதுமை மாவு மற்றும் சோயா மாவு ஆகியவற்றை, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
  • ஒரு மிளகாயுடன் உளுந்தை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • நன்றாக ஊறியதும் சோம்பு, உப்பு, ஒரு மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
  • இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் வைத்து, ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.
  • ஒரு குச்சியை விட்டு பார்க்கும்போது மாவு ஒட்டாமல் வர வேண்டும்.
  • பிறகு இந்த உளுந்து பூரணத்தை ஆற வைத்து உதிர்த்து கொள்ளவும். கடாய் காய்ந்ததும் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, உளுந்து பூரணத்தை சேர்த்து கிளறி இறக்கவும்.
  • பிசைந்து வைத்திருக்கும் மாவிலிருந்து சிறிது எடுத்து உருண்டையாக்கி கிண்ணம் போல செய்ய வேண்டும்.
  • உளுந்து பூரணத்தை அதில் நிரப்பி, உருட்டி மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து கொள்ளவும்.
  • தோசைக்கல்லில் சுட்டெடுக்கவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More