தேவையானவை:
- கோதுமை மாவு – ஒரு கப்
- சோயா மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
- கடுகு – அரை டீஸ்பூன்
- எண்ணெய் – 2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு.
பூரணத்திற்கு தேவையானவை:
- உளுந்து – கால் கப்
- காய்ந்த மிளகாய் – 2
- சோம்பு – கால் டீஸ்பூன்
- தேவையான அளவு உப்பு.
செய்முறை:
- கோதுமை மாவு மற்றும் சோயா மாவு ஆகியவற்றை, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
- ஒரு மிளகாயுடன் உளுந்தை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- நன்றாக ஊறியதும் சோம்பு, உப்பு, ஒரு மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
- இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் வைத்து, ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.
- ஒரு குச்சியை விட்டு பார்க்கும்போது மாவு ஒட்டாமல் வர வேண்டும்.
- பிறகு இந்த உளுந்து பூரணத்தை ஆற வைத்து உதிர்த்து கொள்ளவும். கடாய் காய்ந்ததும் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, உளுந்து பூரணத்தை சேர்த்து கிளறி இறக்கவும்.
- பிசைந்து வைத்திருக்கும் மாவிலிருந்து சிறிது எடுத்து உருண்டையாக்கி கிண்ணம் போல செய்ய வேண்டும்.
- உளுந்து பூரணத்தை அதில் நிரப்பி, உருட்டி மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து கொள்ளவும்.
- தோசைக்கல்லில் சுட்டெடுக்கவும்.



0 comments:
Post a Comment