தேவையானவை :
பாலக் 4 கட்டு
பனீர் 750 கிராம்
எண்ணை ஒரு டீஸ்பூன் /நெய்
ஃபிரெஷ் கிரீம் (தேவையானால் மட்டும்)
துருவிய பனீர் 1 ஸ்பூன் (மேலே தூவ)
அரைக்க வேண்டிய பொருட்கள் :
தனியாப்பொடி 1 ஸ்பூன்
சீரகப்பொடி 1 ஸ்பூன்
பட்டை பொடி 1/2 ஸ்பூன்
சோம்புப் பொடி 1/2 ஸ்பூன்
ஏலக்காய் 2
(மேற்கூறிய பொடிகள் கைவசம் இல்லாவிடில்
பிரிஞ்சி மசாலாப் பொடியையும் சேர்க்கலாம் )
பெரிய வெங்காயம் 2
பூண்டு 2 பல்
கொத்தமல்லித் தழை 1 கைப்பிடி அளவு
ஒரு தக்காளி
பச்சை மிளகாய் 4
நன்கு விழுதாக அரைக்கவும்
செய்முறை:
முதலில் பாலக்கை, அலம்பி வேகவைத்து சிறிது ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணை விட்டு பனீரை சின்னச் சின்ன கியூபாக துண்டுகள் செய்து கொண்டு லேசாக எண்ணையில் போட்டுப் பொன்னிறமாக பொறித்து தனியாக வைத்துக் கொள்ளவும் .
வாணலியில் எண்ணை விட்டு அரைத்த மசாலா விழுதை முதலில் போட்டு வதக்கவும். எண்ணைப் பிரிந்து வரும்போது, அரைத்து வைத்துள்ள கீரையை போடவும்.
உப்பு போடவும்.
நன்கு கலக்கவும்,
கொதிக்கவிடவும்.
பனீர் துண்டுகளை போடவும்.
வதக்கவும்.
அடுப்பை சின்னதாக வைக்கவும்.
ஒரு 5 நிமிடம் அப்படியே கொதிக்க விடவும்.
நடுவில் ஒரு முறை கிளறி விடவும்.
ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
துருவிய பனீர் அல்லது கிரீம் சேர்த்து அலங்கரிக்கவும் .
அருமையான ‘பாலக் பனீர் ‘ தயார்.
சப்பாத்தி , நான், பூரி அல்லது சாதத்துடன் பரிமாறவும்.
குறிப்பு: தேவையானால் பனீர் துண்டுகளை எண்ணையில் வறுக்காமலும் சேர்க்கலாம்.
.
0 comments:
Post a Comment