தேவையானவை:
*துவரம் பருப்பு - 4 மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
*மிளகாய் வற்றல் - 2
*மல்லி - 4 தேக்கரண்டி
*மிளகு - 2 தேக்கரண்டி
*சீரகம் - ஒரு தேக்கரண்டி
*தக்காளி - 2
*தேங்காய் துருவல் - கால் கப்
*மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
*கறிவேப்பிலை - 2 கொத்து
*புளி - சிறிய எலுமிச்சை அளவு
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*உப்பு - அரை தேக்கரண்டி
செய்முறை:
1. தக்காளியை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களையும் தயாராய் வைத்துக் கொள்ளவும்
2. ரசப்பொடி தயாரிக்க, துவரம் பருப்பில் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும். அத்துடன் மல்லி, மிளகு, சீரகம் ஆகியவற்றை எடுத்து வைக்கவும்.
3. முதலில் ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அதில் பருப்பைப் போட்டு நன்கு வேகவிடவும். பருப்பு வேக சற்று நேரம் எடுக்கும். அந்த நேரத்தில் மற்றொரு அடுப்பில் கீழ்கண்டவற்றை செய்துகொள்ளவும்
4. வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடி தயாரிக்க வைத்துள்ள துவரம் பருப்பு, மிளகாய் வற்றல், மல்லி, மிளகு, சீரகம் போட்டு சிவக்க வறுக்கவும்
5. வறுத்து எடுத்தவற்றை ஆறவைத்து, பின்னர் மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
6. வாணலியில் எண்ணெயில்லாமல் தேங்காய் துருவலை போட்டு வறுத்து எடுத்து, மிக்ஸியில் போட்டு பொடித்து எடுத்துக் கொள்ளவும்
7. புளியை ஒன்றரை கப் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும். அத்துடன் மஞ்சள்தூள், உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவிடவும்.
8. வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளித்து தக்காளியை போட்டு 30 நொடி வதக்கவும்
9. தக்காளி சற்று வதங்கிய பின்பு, புளிக்கலவையை ஊற்றி சுமார் 3 நிமிடம் கொதிக்க விடவும்
10. அதில் 2 மேசைக்கரண்டி பொடித்த ரசப் பொடியை போட்டு ஒரு நிமிடம் வேகவிடவும். பிறகு வேக வைத்த பருப்பை மசித்துக் கொட்டி, ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். தேங்காய் பொடி 2 மேசைக்கரண்டி போட்டு கலக்கி விடவும்
11. ரசம் கொதித்து நுரைத்தவுடன் இறக்கி விடவும்.மேலே சிறிது தேங்காய்ப் பொடியினை தூவலாம். மைசூர் ரசம் தயார். தேங்காய், பருப்பு அதிகம் சேர்ப்பதுதான் மைசூர் ரசத்தின் சிறப்பு
*துவரம் பருப்பு - 4 மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
*மிளகாய் வற்றல் - 2
*மல்லி - 4 தேக்கரண்டி
*மிளகு - 2 தேக்கரண்டி
*சீரகம் - ஒரு தேக்கரண்டி
*தக்காளி - 2
*தேங்காய் துருவல் - கால் கப்
*மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
*கறிவேப்பிலை - 2 கொத்து
*புளி - சிறிய எலுமிச்சை அளவு
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*உப்பு - அரை தேக்கரண்டி
செய்முறை:
1. தக்காளியை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களையும் தயாராய் வைத்துக் கொள்ளவும்
2. ரசப்பொடி தயாரிக்க, துவரம் பருப்பில் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும். அத்துடன் மல்லி, மிளகு, சீரகம் ஆகியவற்றை எடுத்து வைக்கவும்.
3. முதலில் ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அதில் பருப்பைப் போட்டு நன்கு வேகவிடவும். பருப்பு வேக சற்று நேரம் எடுக்கும். அந்த நேரத்தில் மற்றொரு அடுப்பில் கீழ்கண்டவற்றை செய்துகொள்ளவும்
4. வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடி தயாரிக்க வைத்துள்ள துவரம் பருப்பு, மிளகாய் வற்றல், மல்லி, மிளகு, சீரகம் போட்டு சிவக்க வறுக்கவும்
5. வறுத்து எடுத்தவற்றை ஆறவைத்து, பின்னர் மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
6. வாணலியில் எண்ணெயில்லாமல் தேங்காய் துருவலை போட்டு வறுத்து எடுத்து, மிக்ஸியில் போட்டு பொடித்து எடுத்துக் கொள்ளவும்
7. புளியை ஒன்றரை கப் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும். அத்துடன் மஞ்சள்தூள், உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவிடவும்.
8. வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளித்து தக்காளியை போட்டு 30 நொடி வதக்கவும்
9. தக்காளி சற்று வதங்கிய பின்பு, புளிக்கலவையை ஊற்றி சுமார் 3 நிமிடம் கொதிக்க விடவும்
10. அதில் 2 மேசைக்கரண்டி பொடித்த ரசப் பொடியை போட்டு ஒரு நிமிடம் வேகவிடவும். பிறகு வேக வைத்த பருப்பை மசித்துக் கொட்டி, ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். தேங்காய் பொடி 2 மேசைக்கரண்டி போட்டு கலக்கி விடவும்
11. ரசம் கொதித்து நுரைத்தவுடன் இறக்கி விடவும்.மேலே சிறிது தேங்காய்ப் பொடியினை தூவலாம். மைசூர் ரசம் தயார். தேங்காய், பருப்பு அதிகம் சேர்ப்பதுதான் மைசூர் ரசத்தின் சிறப்பு
0 comments:
Post a Comment