தேவையான பொருட்கள்
- புளி - ஒரு எழுமிச்சம் பழ அளவு,
- துவரம்பருப்பு - 3 தேக்கரண்டி,
- மிளகு - 1 1/2 தேக்கரண்டி,
- தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி,
- காய்ந்த மிளகாய் - 2,
- சீரகம் - 1/2 தேக்கரண்டி,
- பெருங்காயம் - சிறிது,
- கறிவேப்பிலை - சிறிது,
- மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
- உப்பு - தேவையான அளவு,
- நெய் - 2 ஸ்பூன்.
- புளியை 1/2 லிட்டரில் நீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டி வைக்கவும்.
- புளித்தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
- வாணலியில் நெய் விட்டு, துவரம் பருப்பு, மிளகாய், மிளகு, தேங்காய் துருவல் தனிதனியாக வறுக்கவும்.
- பின் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நைசாக அரைக்கவும்.
- அரைத்ததை கொதிக்கும் புளித்தண்ணீரில் சேர்த்து, பொங்கி வரும் சமயம் இறக்கவும். மீதியுள்ள நெய்யில் சீரகம், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்
Posted in: ரச வகைகள்




0 comments:
Post a Comment