Wednesday, January 2, 2013

கோடைக்கான முருங்கைக்காய் சூப்



தேவையானவை :

இளசாகவும் திடமாகவும் உள்ள முருங்கைக்காய்    &    4
தக்காளி        &    50 கிராம்
பயத்தம் பருப்பு    &    100 கிராம்
பெரிய வெங்காயம்    &    2
பச்சை மிளகாய்        &    2
தேங்காய்        &    1 துண்டு
லவங்கப்பட்டை        &    1
நெய்            &    1 மேஜைக்கரண்டி
உப்பு            &    தேவையான அளவு
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். முருங்கைக்காயை விரல் அளவு நீளமாகத் துண்டிக்கவும். பச்சை மிளகாய், தேங்காய், லவங்கப் பட்டையை விழுதாக அரைத்துக் கொள்ளவும்,


செய்முறை :
தேவையான மிளகு, உப்பைப் பொடி செய்யவும். தக்காளியைச் சிறு துண்டுகளாக நறுக்கவும்.
பாத்திரத்தில் இரண்டு லிட்டர் நீர்விட்டு அடுப்பில் வைக்கவும். தண்ணீர் சூடானதும் பருப்பைப் போடவும்.

பருப்பு வெந்ததும் முருங்கைக்காய், தக்காளியைப் போடவும். எல்லாம் நன்றாக கரையும் வரை அடுப்பில் வைத்திருக்கவும். பிறகு அரைத்ததைப் போடவும். எல்லாம் கரைந்து தண்ணீர் பாதியாகச் சுண்டியதும் இறக்கவும்.

வாணலியில் நெய்யை விட்டு அடுப்பில் வைக்கவும். காய்ந்ததும் வெங்காயத்தை போடவும், வதங்கியதும் வெந்ததில் கொட்டி அடுப்பில் வைக்கவும்.
மிளகு, உப்புப் பொடியைப் போட்டு ஒரு கொதி வரம்

வரை அடுப்பில் வைத்திருந்து இறக்கினால் முருங்கைக்காய் சூப் தயார்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More