Wednesday, January 2, 2013

இனிப்பு சமோசா

தேவையானவை :

தேங்காய் & 1 வெல்லம் & 3/4 ஆழாக்கு ஏலக்காய் & 4 எண்ணெய் & 200 கிராம் மைதாமாவு அல்லது கோதுமை மாவு & 200 கிராம்.


செய்முறை :

மைதாமாவு அல்லது கோதுமை மாவை தண்ணீர் விட்டு பூரிக்கு பிசைவது போன்ற பக்குவத்தில் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வாணலியில் ஒரு கரண்டி தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு கொதித்ததும் தேங்காய் துருவலை அதில் போட்டு நன்றாகக் கிளறவும், தண்ணீர் வற்றி, பூரணம் சுருண்டு வந்ததும் வாணலியை இறக்கி வைத்து ஏலாக்காயை பொடி செய்து போட்டு கலக்கவும். தேங்காய் பூரணம் நன்றாக ஆறியதும் சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும். மைதாவை நன்கு பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ஒரு உருண்டையை இரண்டு கை விரல்களாலும் அழுத்தி சிறிய வட்டமாக்கவும். நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து நன்றாக மூடி கொழுக்கட்டை வடிவம் போல் செய்யவும். இதே போல எல்லா உருண்டைகளையும் பூரணம் வைத்து கொழுக்கட்டை(இனிப்பு சமோசா) போலச் செய்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் வைத்து நன்றாகக் காய்ந்ததும் நான்கு இனிப்பு சமோசா அதில் போட்டு, வேக விடவும். கரண்டியால் திருப்பிப் போட்டு நன்றாக வெந்ததும் (லேசாக சிவப்பு நிறமானதும்) எண்ணெயை வடித்து எடுத்து வைக்கவும். இதே போல எல்லாக் இனிப்பு சமோசாக்களையும் செய்யவும். தேங்காய் பூரணத்துக்குப் பதிலாக கடலைப் பூரணம் வைத்தும் இனிப்பு சமோசா செய்யலாம்.  

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More