Wednesday, January 2, 2013

கேரட் பூரி

தேவையானவை :

கோதுமை மாவு - 2 கப்,
அரைத்த கேரட் விழுது - அரை கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
ஓமம் அல்லது சீரகம் -2 டீஸ்பூன்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய பச்சை மிளகாய் -அரை டீஸ்பூன்
அல்லது மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிப்பதற்கு.

செய்முறை :

கோதுமை மாவில் உப்பு சேர்த்துப் பிசறி, அதில் நெய், ஓமம் அல்லது சீரகம், கேரட் விழுது, பச்சை மிளகாய் அல்லது மிளகாய் தூள் சேர்த்துப் பிசைந்து 10 நிமிடங்கள் வைக்கவும்.

பிறகு சின்னச் சின்ன வட்டமாக இட்டு, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.
களைப்பான கண்கள்  புத்துணர்வு பெற கேரட் பூரி சாப்பிடலாம்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More