Wednesday, January 2, 2013

நவராத்திரி ஸ்பெஷல் போக்

என்னென்ன தேவை?
பச்சரிசி, பாசிப்பருப்பு -  தலா 2 கப்,
முந்திரிப்பருப்பு - 10,
இஞ்சி - 1 சிறிய துண்டு,
சர்க்கரை - 1 டீஸ்பூன்,
ஒன்றிரண்டாக உடைத்த மிளகு,
சீரகம் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
பிரிஞ்சி இலை - 2,
கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, காலிஃபிளவர்,
உருளைக் கிழங்கு சேர்த்த கலவை - 2 கப்,
பச்சை மிளகாய் - 4, நெய், எண்ணெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - சிறிது.


எப்படிச் செய்வது?
பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். குக்கரில் நெய், எண்ணெய் சேர்த்து, முந்திரி, மிளகு, சீரகம், பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய காய்கறி, அரிசி, பருப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, 6 கப் சூடான தண்ணீர் விட்டு, மஞ்சள் தூள், சர்க்கரை, உப்பு சேர்த்து வேக வைத்து இறக்கவும். எல்லாம் நன்கு வெந்து, தளர்வாக இருக்க வேண்டும். சிறிது நெய் சேர்த்து, சூடாகப் பரிமாறவும். கொல்கத்தாவில் நவராத்திரிக்கு தினமும் துர்க்கைக்கு இதுதான் பிரசாதம்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More