Monday, December 31, 2012

மல்டி காய்கறி குழம்பு

தேவையானவை:

கேரட், தக்காளி, 
குடமிளகாய், பச்சை மிளகாய், 
சின்ன வெங்காயம், 
பீன்ஸ், பச்சை பட்டாணி, 
உருளைக் கிழங்கு - எல்லாம் சேர்த்து 2 கப், 
பாசிப் பருப்பு - 1 கப், 
புளித் தண்ணீர் - 1 டேபிள் ஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு, 
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், 
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி -சிறிது, 
எண்ணெய் - தேவைக்கேற்ப, 
கடுகு, சீரகம் -தலா அரை டீஸ்பூன்.


செய்முறை:
காய்கறிகளைப் பொடியாக நறுக்கி, வேக வைக்கவும். பாசிப்பருப்பை சுத்தம் செய்து வேக வைத்து, அத்துடன் வேக வைத்த காய்கறிகளைப் போட்டு, புளித் தண்ணீர், உப்பு, சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும். 

பிறகு கடுகு, சீரகம் தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.அவசரத்துக்கு கை கொடுக்கும் இந்த மல்டி காய்கறி குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும். விரத நாட்களில் வெங்காயத்தை தவிர்க்கலாம்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More