Monday, December 31, 2012

புதினா மல்லி இனிப்பு உருண்டை

என்னென்ன தேவை?
புதினா - 1 கட்டு, 
தனியா - 50 கிராம், 
காய்ந்த திராட்சை - 50 கிராம், 
பூசணி விதை, 
வெள்ளரி விதை - தலா 1 டீஸ்பூன், 
பனை வெல்லம் - 100 கிராம், 
சுக்கு - 1 துண்டு, 
ஏலக்காய் - 4, மஞ்சள் தூள் - தேவையான அளவு.


 எப்படிச் செய்வது?

புதினாவை சுத்தம் செய்து, பொடியாக வெட்டவும். அதை மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் விடாமல் வாட்டவும். பிறகு தனியாவையும் அதே போல வெறும் கடாயில் வறுக்கவும். அடுத்து பூசணி விதை, வெள்ளரி விதை, சுக்கு, ஏலக்காயையும் வறுத்துப் பொடிக்கவும். எல்லாவற்றையும் மறுபடி ஒரு கடாயில் சேர்த்து, காய்ந்த திராட்சை சேர்த்து, பனைவெல்லத்தைப் பொடித்துப் போட்டுக் கிளறவும். சூடாக இருக்கும் போதே உருண்டைகள் பிடித்து வைக்கவும். பருக்கள் வராமல் காக்கும். ரத்தம் சுத்தமாகி, சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அண்டாது.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More