Monday, December 31, 2012

கறிவேப்பிலைக் குழம்பு


இளசாக உருவிய கறிவேப்பிலை இலைகள்–2கப்
தோல் நீக்கி உறித்த பூண்டு இதழ்கள்—-கால்கப்
மிளகாய் வற்றல்——-3
மிளகு–2 டீஸ்பூன்
தனியா—-3 டீஸ்பூன்
சுக்கு—-ஒரு சிறிய துண்டு
ஓமம்–அரை டீஸ்பூன்
அரிசி–ஒரு டீஸ்பூன்
மேலே கொடுத்திருப்பவை யாவும் வறுப்பதற்கு.
தாளித்துக் கொட்ட—-கடுகு,,பெருங்காயம்,  வெந்தயம் 1டீஸ்பூன்
ஒவ்வொரு  ஸ்பூன்       கடலை உளுத்தம், பருப்புகள்,      வேர்க் கடலை,
தாளிக்க——நல்லெண்ணெய்–4 டேபிள் ஸ்பூன்
ருசிக்கு உப்பு—1டீஸ்பூன் மஞ்சள்பொடி
புளி—1எலுமிச்சை அளவு,  வெல்லத்தூள் 1ஸ்பூன்
செய்முறை–புளியை வெந்நீரில் ஊறவைத்து 2,3முறை தண்ணீர் விட்டு
சாறு எடுத்துக் கொள்ளவும்.
வறுக்கக் கொடுத்திருப்பவைகளை சிறிது எண்ணெயில் வறுத்து பூண்டு
கறிவேப்பிலையையும் வதக்கிச் சேர்த்து, ஆறியபின் சிறிது ஜலம் சேர்த்து
அரைத்துக் கொள்ளவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து கடுகு,
பருப்புவகைகளைத் தாளித்து ,புளிக்கரைசலில் அரைத்த விழுதைக்
கொட்டிக் கரைத்து வேண்டிய அளவு ஜலம் சேர்த்து கொதிக்க விடவும்.
உப்பு, மஞ்சள், வெல்லம் சேர்க்கவும்.
குழம்பு நன்றாகக் கொதித்து திக்கான பதம் வந்ததும் இறக்கவும்
 ருசியானதும், உடம்பிற்கு  ஆரோக்கியமானதுமான குழம்பு.
நெய் சேர்த்துச் சாப்பிடவும்.
ருசிக்கு சிறிது தேங்காயும் சேர்த்து அரைக்கலாம்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More