Monday, December 31, 2012

சுரக்காய் மோர்குழம்பு

தேவையானவை:

*அரிசி - 1/2 டீஸ்பூன்
*துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
*தனியா - 1 டீஸ்பூன்
*தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
*எண்ணை - 1 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*காய்ந்த மிளகாய் - 1
*கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
*உப்பு - 1 டீஸ்பூன்
*மோர் - 2 கப் (திக்காக இருக்கவேண்டும்)
*சுரக்காய் - 1
*மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
*பச்சைமிளகாய் - 2
*சீரகம் - 1/2 டீஸ்பூன்



செய்முறை:
*துவரம் பருப்பு, தனியா, சீரகம், அரிசி அகியவற்றை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.பின்னர் தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

*ஒரு பாத்திரத்தில் சுரக்காய் போட்டு அதில் உப்பு,மஞ்சள்தூள் போட்டு வேக வைக்கவும்.காய் வெந்தப்பின் அரைத்த கலவையை அதில் சேர்க்கவும்.

*பின் மோர் சேர்த்து 1 நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய்,கறிவேப்பிலை தாளித்து அதை மோர்குழம்பில் கொட்டவும்.

*சுவையான மோர் குழம்பு சூடான சாதத்திற்கு அப்பளம் வடகமுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More