Wednesday, January 2, 2013

காய்கறி வடை

தேவையான பொருட்கள்

உளுந்தம்பருப்பு - 100 கிராம்
கடலை பருப்பு - 100 கிராம்
காய்கறிகள் - 250 கிராம் (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
இஞ்சி - சிறிய துண்டு நறுக்கியது
மிளகாய் - 2
சீரகம் - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - 1/2 லிட்டர்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. உளுந்தம் பருப்பையும், கடலை பருப்பையும் ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, முக்கால் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.

2. இதனுடன் நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய், இஞ்சி, பெருங்காயம், சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். (தேவைப்பட்டால் மிளகாய், இஞ்சியை அறைத்தும் சேர்க்கலாம்)

3. ஒரு வாழை இலை அல்லது மொத்தமான பிளாஸ்டிக் கவரில் வடை மாவை தட்டி, வாணலியில் காய வைத்த எண்ணெயில் இட்டு பொரிக்கவும்.

4. இரு புறமும் திருப்பிப் போட்டு வடை நன்கு சிவந்தவுடன் எடுத்து வடிதட்டில் இட்டு எண்ணெய் வடிந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

குறிப்பு

1. எண்ணெய் சரியாக சூடாகாமல் வடை போட்டால் எண்ணெய் குடிக்கும்.

2. வடைக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியோ, மிளகாய் சட்னியோ, வெங்காய சட்னியோ செய்தால் சுவையாக இருக்கும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More