தேவையானவை:
* சீனி - 130 கிராம்
* ஜெலற்றீன் - ஒரு தேக்கரண்டி
* யோக்கற் - ஒரு கப்
* யோக்கற் கப் - 30 கப்
* தேமோ மீற்றர் - ஒன்று
* கொதிநீர் - 4 மேசைக்கரண்டி
* தண்ணீர் - தேவையானளவு
* ஓகண்டி துணி - தேவையானளவு
* கலரிங் - 4 துளிகள்
* எசன்ஸ் - 3 துளிகள்
* இக்குபேற்றர்

செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் பால், சீனி இரண்டையும் போட்டு நன்றாக கரைத்து கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் ஜெலற்றீனை போட்டு அதன் மேல் 4 மேசைக்கரண்டி கொதி நீர் விட்டு கலந்து வைக்கவும்.
* அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அந்த பெரிய பாத்திரத்தில் 2/3 பகுதிக்கு தண்ணீர் விட்டு பால் உள்ள பாத்திரத்தை அதனுள் வைத்து கொதிக்க வைக்கவும்.
* அதன் பின்பு பாலின் வெப்பநிலையை தேமா மீற்றரினால் அளக்கவும். பாலின் வெப்பநிலை 90 க்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
* அதன் பின்பு 30 நிமிடத்திற்கு அடுப்பிலே வைத்த பின்பு அடுப்பிலிருந்து இறக்கி கொள்ளவும்.
* பால் ஆற தொடங்கும் போது தேமோ மீற்றரினால் அளக்கவும். பாலின் வெப்பநிலை 60க்கு வந்தபின்பு ஜெலற்றீன் கலவையை விட்டு நன்றாக கரைத்து ஓகண்டி துணியை வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
* அதன் பின்பு பாலின் வெப்பநிலை 40 அடையும் போது யோக்கற் ஒரு கப் இட்டு கரண்டியால் நன்றாக கலக்கவும். பின்பு கலறிங், எசன்ஸ் கலந்து யோக்கற் கப்பில் ஊற்றி 40 வெப்பநிலையில் 5 மணித்தியாலம் இக்குபேற்றரில் வைக்கவும்.
* யோக்கற் இறுகியதும் இக்குபேற்றரிலிருந்து வெளியே எடுத்து அறை வெப்பநிலையில் 10 நிமிடம் வைக்கவும் பின்பு எடுத்து 24 மணித்தியாலம் குளிரூட்டியில் வைக்கவும். பின்பு எடுத்து அறை வெப்பநிலையில் 2 மாத காலத்திற்கு வைத்து பயன்படுத்தலாம்.



0 comments:
Post a Comment