தேவையானப் பொருள்கள்:
பச்சரிசி (அ) புழுங்கல் அரிசி_1 கப்
கேரட்_பாதி
இஞ்சி_ஒரு மிகச்சிறிய துண்டு
பச்சை மிளகாய்_1
சின்ன வெங்காயம்_1
மிளகாய்த்தூள்_1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/4 டீச்பூன்
தேங்காய்ப் பால்_1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_ தேவையான அளவு
கேரட்_பாதி
இஞ்சி_ஒரு மிகச்சிறிய துண்டு
பச்சை மிளகாய்_1
சின்ன வெங்காயம்_1
மிளகாய்த்தூள்_1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/4 டீச்பூன்
தேங்காய்ப் பால்_1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_ தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
சீரகம்_1/4 டீஸ்பூன்
முந்திரி_2
கடலைப் பருப்பு_1 டீஸ்பூன்
வேர்க்கடலை_2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை_5 இலைகள்
பெருங்காயம்_சிறிது
சீரகம்_1/4 டீஸ்பூன்
முந்திரி_2
கடலைப் பருப்பு_1 டீஸ்பூன்
வேர்க்கடலை_2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை_5 இலைகள்
பெருங்காயம்_சிறிது
செய்முறை:
முதலில் அரிசியை நன்றாக வேக வைத்து வடித்து உதிர் உதிராக ஆற வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாகவும்,பச்சை மிளகாயை இரண்டாகவும்(அ)காரம் விரும்பினால் பொடியாகவும்,இஞ்சியைப் பொடியாகவும் நறுக்கிக்கொள்ளாவும்.கேரட் துருவியில் கேரட்டைத் துருவிக்கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளிக்கவும்.அடுத்து இஞ்சி,பச்சை மிளகாயை ஒரு வதக்கு வதக்கி பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பிறகு கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும்.அடுத்து மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி,தேங்காய்ப்பால்,உப்பு சேர்த்துக் கிளறி விடவும். இதில் ஆறிய சாதத்தைப் போட்டுக் கிளறி எலுமிச்சை சாறு,கொத்துமல்லி இலை சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
இதற்கு veg, nonveg வறுவல்கள் அனைத்துமே நன்றாகப் பொருந்தும்.